அஞ்சல் வழியாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மனு / கடிதங்கள் தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதற்குறிய தகவல்கள் தொடர்புடைய பிரிவின் மூலம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அஞ்சல் வாயிலாக குறைதீர் மனுக்களை அனுப்பும் விண்ணப்பதாரர்களுக்கான பொது வழிமுறைகள் :
- குறைதீர் மனுக்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்டவாறு முகவரியிட அறிவுறுத்தப்படுகிறார்கள்
- பின்வரும் வகையிலான குறைதீர் மனுக்கள் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு,
- தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகள்
- சான்றிதழ் சரிபார்ப்பு
- கலந்தாய்வு செயல்முறை
- வாய்மொழி தேர்வு
- காத்திருப்போர் பட்டியல் செயல்படுத்துதல்
- மற்ற பொதுவானவை
- பின்வரும் வகையிலான குறைதீர் மனுக்கள் தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு,
- இணையவழி விண்ணப்பங்கள்
- நுழைவுச்சீட்டு தொடர்பாக
- வினாத்தாள்கள் தொடர்பாக
- தேர்வு முடிவு வெளியீடு
- தேர்வு தொடர்பான மற்றவை